உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போற்றி அமைந்தது இந்தியா ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது என்றே சொல்லலாம் . போட்டியின் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த போதும், கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் இங்லிஸ் 110 ரன்கள் குவித்தார்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், முதல் 2 பந்துகளிலேயே ரிங்கு சிங் 5 ரன்களை அடித்தார். இதன்பின் அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். 5வது பந்தில் 2வது ரன் ஓடும் போது அர்ஷ்தீப் சிங் ரன் அவுட் ஆனார்.
இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை, அந்த பந்தில் ரிங்கு சிங் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் சிக்சர் அடித்தார் . ஆனால் அந்த பந்து நோ-பாலானது. இதனால் 19.5 ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஃபினிஷர் ரோலில் தோனி களமிறங்கும் போது எப்படி பதற்றமில்லாமல் இருப்பாரோ, ரிங்கு சிங்கும் எந்த பதற்றத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து முடித்தார்.
ஐபிஎல் போட்டிகளிலும் இதேபோன்று சீன் கடைசி ஓவர்களில் சிறப்பாக விளையாடிய அணிக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறார்.இதனால் எதிர்காலத்தில் ரிங்கு சிங் - ஃபினிஷிங் செய்வதில் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.