தமிழ் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.
அதில் தினேஷ், எனக்கும் என்னுடைய மனைவி ரக்ஷிதாவிற்கும் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருக்கிறது. நாங்கள் தனியாக தான் வசித்து வருகிறோம். இது என்னை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சோகமாக பேசி இருந்தார். இதனால் அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஷிதாவை பிரிந்தாலும் தினேஷ் அவரை மறக்கவில்லை. தினேஷ் – ரக்ஷிதா இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்த எபிசோடுக்கு பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் ரக்ஷிதா.
அதில், தியானம் செய்வது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘ மற்றவர்கள் சொல்வதை விட உங்கள் தரப்பு நியாயத்தை கர்மா மிக அருமையாக சொல்லும். அமைதியாக இருப்பது நல்லது, மற்றவற்றை அது பார்த்துக்கொள்ளும்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
ரக்ஷிதா வின் இந்த போஸ்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது.